House Churches - R Stanley
March 21st, 2020
1. ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே> கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும்> யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி> அவர் சொன்னது என்னவென்றால்:
2. இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
3. ஆனாலும் ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி> அவர் சொல்லுகிறார்:
4. இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது> நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?
5. இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.
7. உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
8. நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய்> மரங்களை வெட்டிக்கொண்டுவந்து> ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன்> அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
9. அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும்> இதோ> கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும்> நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால்> என் வீடு பாழாய்க்கிடக்கும்போது> நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே> இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
10. ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும்> பூமி பலனைக் கொடாமலும் போயிற்று.
11. நான் நிலத்தின்மேலும்> மலைகளின்மேலும்> தானியத்தின்மேலும்> புது திராட்சரசத்தின்மேலும்> எண்ணெயின்மேலும்> பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும்> மனுஷரின்மேலும்> மிருகங்களின்மேலும்> கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.
12. அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும்> யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும்> ஜனத்தில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும்> தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள்> ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள்.
13. அப்பொழுது கர்த்தருடைய தூதனாகிய ஆகாய்> கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
14. பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும்> யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும்> ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து> தங்கள் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்.
15. தரியு ராஜாவின் இரண்டாம்வருஷம் ஆறாம்மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இது நடந்தது.
March 21st, 2020
April 29th, 2019
June 16th, 2017
June 14th, 2017
February 24th, 2017