House Churches - R Stanley
March 21st, 2020
1. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.
2. இதோ> நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்> அவன் உமக்கு முன்னே போய்> உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
3. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்> அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும்> தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
4. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து> பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
5. அப்பொழுது யூதேயா தேசத்தார் அனவைரும் எருசலேம் நகரத்தார் யாவரும்> அவனிடத்திற்குப்போய்> தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு> யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
6. யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து> தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும்> வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.
7. அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார்> அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல.
8. நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.
9. அந்த நாட்களில்> இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து> யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
10. அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே> வானம்திறக்கப்பட்டதையும்> ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
11. அன்றியும்> நீர் என்னுடைய நேசகுமாரன்> உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று> வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
12. உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.
13. அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து> சாத்தானால் சோதிக்கப்பட்டு> அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.
14. யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு> இயேசு கலிலேயாவிலே வந்து> தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:
15. காலம் நிறைவேறிற்று> தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி> சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
16. அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில்> மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும்> அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக் கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.
17. இயேசு அவர்களை நோக்கி: என்பின்னே வாருங்கள்> உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
18. உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு> அவருக்குப் பின்சென்றார்கள்.
19. அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது> செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு>
20. உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு> அவருக்குப் பின்சென்றார்கள்.
21. பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து> போதகம் பண்ணினார்.
22. அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல்> அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால்> அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
23. அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
24. அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே> எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்> நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.
25. அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்.
26. உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து> மிகுந்த சத்தமிட்டு> அவனை விட்டுப் போய்விட்டது.
27. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்> அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
28. அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று.
29. உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு> யாக்கோபோடும் யோவானோடுங்கூட> சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்.
30. அங்கே சீமோனுடைய மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவனளக்குறித்து அவருக்குச் சொன்னார்கள்.
31. அவர் கிட்டப்போய்> அவள் கையைப் பிடித்து> அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
32. சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது> சகல பிணியாளிகளையும்> பிசாசுபிடித்தவர்களையும்> அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
33. பட்டணத்தார் எல்லாரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
34. பலவிதமான வியாதிகளினாலும் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி> அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்த பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால்> அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.
35. அவர் அதிகாலையில்> இருட்டோடே எழுந்து புறப்பட்டு> வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய்> அங்கே ஜெபம்பண்ணினார்.
36. சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்>
37. அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
38. அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ண வேண்டுமாதலால்> அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;
39. கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர்பிரசங்கம் பண்ணிக்கொண்டும்> பிசாசகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
40. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து> அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.
41. இயேசு மனதுருகி> கையை நீட்டி> அவனதை தொட்டு: எனக்குச் சித்தமுண்டு> சுத்தமாகு என்றார்.
42. இப்படி அவர் சொன்னவுடனே> குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று> அவன் சுத்தமானான்.
43. அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு;
44. ஆயினும் நீ போய்> ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து> நீ சுத்தமானதினிமித்தம்> மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி> உடனே அவனை அனுப்பிவிட்டார்.
45. அவனோ புறப்பட்டுப் போய்> இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல்> வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
March 21st, 2020
April 29th, 2019
June 16th, 2017
June 14th, 2017
February 24th, 2017