House Churches - R Stanley
March 21st, 2020
1. தேவனுடைய ஊழியக்காரனும்> இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல்> பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது:
2. பிதாவாகிய தேவனாலும்> நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்> கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
3. பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி> அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி>
4. ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
5. நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும்> நான் உனக்குக் கட்டளையிட்டபடியே> பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும்> உன்னைக் கீரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.
6. குற்றஞ்சாட்டப்படாதவனும்> ஒரே மனைவியையுடைய புருஷனும்> துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.
7. ஏனெனில்> கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய்> குற்றஞ்சாட்டப்படாதவனும்> தன் இஷ்டப்படி செய்யாதவனும்> முற்கோபமில்லாதவனும்> மதுபானபிரியமில்லாதவனும்> அடியாதவனும்> இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்>
8. அந்நியரை உபசரிக்கிறவனும்> நல்லோர்மேல் பிரியமுள்ளவனும்> தெளிந்தபுத்தியுள்ளவனும்> நீதிமானும்> பரிசுத்தவானும்> இச்சையடக்கமுள்ளவனும்>
9. ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும்> எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி> தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.
10. அநேகர்> விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள்> அடங்காதவர்களும்> வீண்பேச்சுக்காரரும்> மனதைமயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
11. அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து> முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
12. கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர்> துஷ்டமிருகங்கள்> பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
13. இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக> அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும்> சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்>
14. விசுவாசத்தினாலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி> நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
15. சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
16. அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்னுகிறார்கள்> கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும்> கீழ்ப்படியாதவர்களும்> எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
March 21st, 2020
April 29th, 2019
June 16th, 2017
June 14th, 2017
February 24th, 2017